29 Dec 2025
Credit: Social Media
பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
6வது ஆண்டு இசை நிகழ்ச்சியை பிரபல நடிகை சோபிதா துவங்கி வைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர் சோபிதா துலிபலா.
நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு ஆந்திராவில் தெனாலியில் பிறந்தவர் சோபிதா.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் எர்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
பின்னர் அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தற்போது பா.ரஞ்சித் இயக்கி வரும் வேட்டுவம் படத்தில் ஹீரோயினாக சோபிதா நடித்து வருகிறார்.
பிரபாஸின் கல்கி படத்தில் தீபிகா படுகோனுக்கு தெலுங்கில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
மலையாளத்திலும் மூத்தோன், குரூப் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.