இந்தோர் நகரில் குடிநீர் மாசடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தற்போது 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச அரசு, முதல் கட்டமாக கடும் நிர்வாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தோர் மாநகராட்சி ஆணையர் திலீப் குமார் யாதவ் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.