ரயில்வே வாரியம் வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவைகள் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் Emergency Quota முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜனவரியில் இந்த வசதி நீக்கப்பட்ட நிலையில், பயணிகள் தேவைகள், படுக்கை கிடைப்புத் தன்மை மற்றும் நீண்ட தூர பிரீமியம் சேவைகளின் செயல்பாட்டு அவசியம் ஆகியவற்றை பரிசீலித்து பிப்ரவரி 9ஆம் தேதி புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.