ஹிமாச்சலப் பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா நகரங்களான மணாலி மற்றும் சிம்லா பகுதிகளில், பனிப்பொழிவு பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். தொடர்ந்து பெய்த பனியால் நகரம் முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தியதுபோல் காட்சியளிக்கிறது. காலை முதல் மாலை வரை பனித்துகள்கள் இடைவிடாமல் பெய்ததால், மலைப்பகுதிகள் முழுவதும் கண்கவர் அழகுடன் மிளிர்ந்தன. பனியில் விளையாடுதல், புகைப்படங்கள் எடுப்பது, குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வது என சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக ஈடுபட்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த இந்த பனிப்பொழிவு, உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலா துறைக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.