கேரளாவில் கடந்த 9 ஆண்டுகளாகப் பொருத்தமான வரன் தேடித்தராமல் ஏமாற்றிய உள்ளூர் திருமண தகவல் மையத்திற்கு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு நஷ்டஈடு மற்றும் பணத்தைத் திருப்பி அளிக்குமாறு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த அஜித் குமார் என்ற நர்சிங் கல்லூரி பேராசிரியர், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அங்குள்ள திருமண தகவல் மையத்தில் ரூபாய் 3,000 கட்டணம் செலுத்திப் பதிவு செய்துள்ளார்.