 <urlset xmlns="http://www.sitemaps.org/schemas/sitemap/0.9" xmlns:image="http://www.google.com/schemas/sitemap-image/1.1" xmlns:video="http://www.google.com/schemas/sitemap-video/1.1"><url><loc>https://www.tv9tamilnews.com/videos/tiruvarur-ration-shop-staff-refuse-goods-to-cardholders-from-other-areas-106014.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/ration-shop-.jpg</video:thumbnail_loc>


			<video:title>அமைச்சர் சொன்னால் நாங்க கேட்கனுமா...? ரேஷன் கடை ஊழியரின் அடவடி பேசிய வீடியோ வைரல்</video:title>
		
			<video:description>திருவாரூர் மாவட்டம், ஈபி காலணியில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடை எண் 18AP041PN கடையில் பொருட்கள் வாங்க செல்லும் வெளியூர் மற்றும் வேறு கடையில் குடும்ப அட்டை வைத்துள்ள சாமானிய மக்களுக்கு பொருட்கள் வழங்க முடியாது என்றும், அவ்வாறு வழங்க கூடாது என அதிகாரிகள் தங்களுக்கு உத்தவிட்டுள்ளதாகவும், அரசு போதுமான அளவு பொருட்கள் கடைகளுக்கு அனுப்புவது இல்லை என்று அரசு மீது குற்றச்சாட்டை ஆணவத்துடன் பேசி அனுப்பி வருகின்றனர். தற்போது அது தொடர்பான வீடியோ அமைச்சர் உத்தரவிற்கு இவ்வளவுதான் மரியாதையா..? என சமூக வலைத்தளங்களில் வைராக பரவி வருகிறது.  தமிழக சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு துறைகளின் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மீதான மானிய கோரிக்கையில் அமைச்சர் பி வெங்கடரமணன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள் தங்களுக்குரிய கடைகளில் மட்டும் தான் பெருட்கள் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  தமிழ்நாட்டில் எந்த கடைகளில் வேண்டுமானாலும் ரேVஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். நியாய விலை அட்டை கையில் இல்லாவிட்டாலும் அட்டையின் &#039;சாப்ட் காப்பி&#039; மொபைல் போனில்இருந்தால் கூட பொருட்களை வாங்கி கொள்ளலாம்&#039;&#039;என்று கூறி இருந்தார். இந்த உத்தரவை பல்வேறு ரேஷன் கடை ஊழியர்கள் மதிக்காமல் புதிய தவெக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றன என்றார்.</video:description> 	<video:publication_date>2026-09-18T17:26:28+05:30</video:publication_date>
<video:category>தமிழ்நாடு செய்திகள்</video:category>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/0hXrPA32-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/vinoth-v">Vinoth V</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/tiger-that-killed-two-people-captured-in-gudalur-after-intensive-forest-department-operation-105938.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/puli-m.png</video:thumbnail_loc>


			<video:title>கூடலூரில் இருவரை கொன்ற புலி பிடிபட்டது!</video:title>
		
			<video:description>கூடலூர் வனக்கோட்டம், ஓவேலி வனச்சரகப் பகுதியில் இரண்டு பேரைத் தாக்கிக் கொன்ற புலி, வனத்துறையினரின் தீவிர நடவடிக்கைக்குப் பின் பிடிபட்டது. புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முதுமலை புலிகள் காப்பகம், நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 305 தானியங்கி மற்றும் GSM கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது. மேலும், புலியைப் பிடிக்க 14 இடங்களில் பிரத்யேக கூண்டுகள் அமைக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட வனத்துறை சிறப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, புலியைப் பிடிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினர். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு வனத்துறை அமைச்சர் R.V. இரஞ்சித்குமார் கூடலூர் பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். தற்போது புலி பிடிபட்டுள்ளதால், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.</video:description> 	<video:publication_date>2026-09-18T13:33:09+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/jsj8fOm0-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/wild-elephant-attempts-to-attack-cow-in-coimbatores-thadagam-cctv-footage-sparks-concern-105877.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/tadagam-ele.png</video:thumbnail_loc>


			<video:title>தடாகத்தில் மாட்டை தாக்க முயன்ற காட்டு யானை.. வெளியான சிசிடிவி காட்சிகள்..</video:title>
		
			<video:description>கோவை மாவட்டம் தடாகம், மாங்கரை, சோமையனூர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  இந்நிலையில், நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, தடாகம் உச்சயனூர் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளது. பின்னர் எஸ்.எம். நகர் பகுதியில் உள்ள மாட்டு கொட்டகைக்குள் புகுந்து மாட்டு தீவனங்களை தின்றுள்ளது.  இதையடுத்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் கத்தியதால், ஆத்திரமடைந்த யானை ஒரு மாட்டை தாக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக அந்த மாடு தாவி குதித்து தப்பியதால், யானை அங்கிருந்து சென்றது.  இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</video:description> 	<video:publication_date>2026-09-18T07:46:35+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/vLw2444w-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/madurai-meenakshi-amman-temple-maha-kumbabhishekam-held-grandly-after-17-years-105676.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/meenju-.png</video:thumbnail_loc>


			<video:title>17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!</video:title>
		
			<video:description>17 ஆண்டுகளுக்குப் பிறகு உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக கோயில் வளாகம் முழுவதும் பல மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செப்டம்பர் 11ஆம் தேதி முதல் கால பூஜைகள் தொடங்கிய நிலையில், 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.  காலை 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  கும்பாபிஷேகத்தின்போது கோபுரங்களின் கீழ் இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இன்று இரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா நடைபெற உள்ளது. இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.</video:description> 	<video:publication_date>2026-09-17T13:25:14+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/wR2jjb53-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/devotional-fervour-grips-madurai-as-meenakshi-amman-temple-holds-maha-kumbabhishekam-105589.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/meenu-.png</video:thumbnail_loc>


			<video:title>மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..</video:title>
		
			<video:description>உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (செப்.17) வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபமும் புனரமைக்கப்பட்டது. வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செப்.11 முதல் கால பூஜைகள் நடைபெற்றன. 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.  காலை 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், 8.10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இன்று இரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.</video:description> 	<video:publication_date>2026-09-17T07:28:39+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/V3loLsG2-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/seventh-phase-of-yagasala-pooja-held-ahead-of-meenakshi-sundareswarar-temple-consecration-ceremony-in-madurai-105160.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/meenakshi-amman-temple-festival.jpg</video:thumbnail_loc>


			<video:title>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. இன்று 7வது கட்ட யாகசாலை பூஜை!</video:title>
		
			<video:description>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17, 2026 அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 11, 2026 முதலே பூர்வாங்க பூஜைகள் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (செப்டம்பர் 16, 2026) 7வது கட்ட யாகசாலை பூஜை நடைபெற்றது. இதனை மதுரை ஆதீனம் நடத்தி வைத்த நிலையில், கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதனால், கோயில் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.</video:description> 	<video:publication_date>2026-09-16T00:13:39+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/bs7yuXo3-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/vinalin-sweety">Vinalin Sweety</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/madurai-meenakshi-amman-temple-illuminated-ahead-of-kumbabhishekam-ceremony-105184.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/meenakshi-amman-temple.jpg</video:thumbnail_loc>


			<video:title>கும்பாபிஷேகத்திற்கு தயராகும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கோபுரங்கள்!</video:title>
		
			<video:description>மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்டம்பர் 17, 2026 அன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் செப்டம்பர் 11, 2026 முதலே தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான், கோயில் கோபுரங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயில் கோபுரங்கள், பிரகாரங்கள், மூலவர் சன்னதிகள், கொடிமரங்கள் என அனைத்து இடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, கோயில் முழுவதையும் அலங்கரிக்க சுமார் 5 டன் வண்ண மலர்களும் வந்து இறங்கியுள்ளன. அரளிப்பூ, இருவாச்சி பூக்கள், மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு என பல வண்ணங்களில் கோயில் முழுவதையும் அலங்கரிக்க வண்ண மலர்கள் வந்து இறங்கியுள்ளன. இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</video:description> 	<video:publication_date>2026-09-15T12:51:57+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/BLmBfLly-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/vinalin-sweety">Vinalin Sweety</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/5-years-old-female-elephant-named-parvathy-brought-to-madurai-meenakshi-amman-temple-105128.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/durga-elephant.jpg</video:thumbnail_loc>


			<video:title>மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த ‘பார்வதி’ யானை!</video:title>
		
			<video:description>மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்கனவே ‘பார்வதி’ என்ற பெண் யானை ஒன்று உள்ள நிலையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து துர்கா என்கிற 5 வயது பெண் யானை ஒன்று வாங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒட்டகமும் வாங்கப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொண்டுவரப்பட்டது. கோயில்களுக்குப் புதிதாக யானைகள் வாங்கவோ, தானமாகப் பெறவோ கூடாது என்று தனி நீதிபதி விதித்திருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டு இருந்த நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து &#039;துர்கா&#039; என்ற பெண் யானை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குக் கொண்டு வர வனத்துறை ஒப்புதல் அளித்திருந்தது. அசாமில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த 5 வயது பெண் யானை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் வளாகத்திற்கு வந்தடைந்த இந்த யானைக்கு பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.</video:description> 	<video:publication_date>2026-09-14T23:25:39+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/7jSL03U2-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/vinalin-sweety">Vinalin Sweety</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/traditional-valli-kummi-dance-captivates-devotees-at-ganesh-chaturthi-celebration-in-coimbatore-105101.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/vfalli-.jpg</video:thumbnail_loc>


			<video:title>கோவை வடவள்ளியில் பரவசமூட்டிய வள்ளி கும்மியாட்டம்..</video:title>
		
			<video:description>கோவை வடவள்ளி பி.என்.புதூர் 41-வது வார்டில் இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் 13-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  விழாவின் சிறப்பம்சமாக, கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. சிறுமிகள் முதல் வயதான பெரியவர்கள் வரை பாரம்பரிய சீருடை அணிந்து, ஒரே நேர்த்தியான முறையில் கைகளைத் தட்டி கும்மியாடினர். இதனை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்து, கைதட்டி உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு நெய்வேத்தியப் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.</video:description> 	<video:publication_date>2026-09-14T22:16:01+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/9KtmykqV-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/ganesh-chathurthi-a-youngster-carrying-ganesh-idol-in-bike-viral-video-105091.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/bke-vina.jpg</video:thumbnail_loc>


			<video:title>இருசக்கர வாகனத்தில் விநாயகர் சிலையை அழைத்துச் சென்ற நபர்.. வைரல் வீடியோ..</video:title>
		
			<video:description>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பூஜைக்காக விநாயகர் சிலையை வாங்கியுள்ளார். அந்த சிலையை தனது இருசக்கர வாகனத்தில் சக பயணியைப் போல அமர வைத்து, அன்புடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  பொதுவாக விநாயகர் சிலைகள் லாரி அல்லது ஆட்டோக்களில் எடுத்துச் செல்லப்படும் நிலையில், வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சிலையை அமர வைத்து அழைத்துச் சென்ற காட்சி பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.</video:description> 	<video:publication_date>2026-09-14T20:55:55+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/p2HvTLIw-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/vinayagar-chaturthi-special-prayers-were-conducted-for-the-kumki-elephants-at-the-sadivayal-elephant-camp-105087.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/sadi-.jpg</video:thumbnail_loc>


			<video:title>சாடிவயல் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா.. யானைகளுக்கு சிறப்பு பூஜை..</video:title>
		
			<video:description>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. முகாமில் உள்ள ‘சுயம்பு’, ‘பாரி’ உள்ளிட்ட கும்கி யானைகளை வனத்துறையினர் மற்றும் பாகன்கள் அதிகாலையில் நொய்யல் ஆற்றில் குளிப்பாட்டி, நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து மாலைகள் அணிவித்து அலங்கரித்தனர். தொடர்ந்து விநாயகர் படத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, கும்கி யானைகளுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க ‘கஜ பூஜை’ நடைபெற்றது.  பூஜை நிறைவடைந்ததும் யானைகளுக்கு கரும்பு, வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசி, தேங்காய் உள்ளிட்ட பழங்களும், அரிசி, வெல்லம் மற்றும் சத்து மாவு உருண்டைகள் உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்பட்டன. இதில் வனத்துறை அதிகாரிகள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் யானைப் பாகன்கள் கலந்து கொண்டனர்.</video:description> 	<video:publication_date>2026-09-14T20:36:13+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/wX50jQxz-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/coimbatore-puliakulam-munti-vinayagar-chaturthi-santhana-kaappu-raja-alangaram-104993.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/vinayagar.jpg</video:thumbnail_loc>


			<video:title>கோவையில் 50 கிலோ சந்தனம், 2 டன் மலர்களால் புலியகுளம் முந்தி விநாயகருக்கு பிரம்மாண்ட ராஜ அலங்காரம்!</video:title>
		
			<video:description>விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் மிகுந்த பக்தி பரவசத்துடனும் உற்சாகத்துடனும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டுத் தமிழகத்தில் உள்ள அனைத்து விநாயகர் திருக்கோவில்களிலும் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள், யாகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றன. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக்கல் விநாயகர் கோவை நகரின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோவில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும். இங்கு வீற்றிருக்கும் விநாயகர் திருவுருவச் சிலை ஆசிய கண்டத்திலேயே மிகப்பரிய ஒற்றைக்கல் சிலையாகப் போற்றப்படுகிறது. சுமார் 190 டன் எடையும், 19 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட இந்த பிரம்மாண்ட திருமேனி, கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வழிபாட்டு மையமாகத் திகழ்கிறது. 50 கிலோ சந்தனம், 2 டன் மலர்களால் ராஜ அலங்காரம் இன்றைய விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, புலியகுளம் முந்தி விநாயகருக்குச் சிறப்புச் சந்தன காப்பு சாத்தப்பட்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விசேஷ அலங்காரத்திற்காகச் சுமார் 50 கிலோ தூய சந்தனமும், 2 டன் அளவிலான வண்ணமயமான நறுமண மலர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, விநாயகர்பெருமானுக்குப் பிரம்மாண்டமான மயில் தோகை மாலையும் அணிவிக்கப்பட்டிருப்பது இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பம்சமாக அமைந்து பக்தர்களைச் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.</video:description> 	<video:publication_date>2026-09-14T14:33:27+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/9yeAXRto-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/sekaran-s">Sekaran S</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/salem-vinayagar-chaturthi-siddhi-buddhi-wedding-avatar-300-seervarisai-104990.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/vinayagar-statue.jpg</video:thumbnail_loc>


			<video:title>சேலத்தில் 300 வகையான சீர்வரிசைகளுடன் கல்யாண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர்!</video:title>
		
			<video:description>சேலம், செப்டம்பர் 14: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற இறைவனான விநாயகப் பெருமானை வழிபடக் கோவில்களிலும், பொது இடங்களிலும் விசேஷ பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காகவும் வழிபாட்டிற்காகவும் பல்வேறு கலைநயமிக்க வடிவங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வீற்றிருக்கின்றன. சேலம் செவ்வாய்பேட்டையில் அபூர்வக் கோலம்: சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை பகுதியில், &#039;எலைட் நண்பர்கள் குழு&#039; சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டில் தங்களது 46-வது ஆண்டு படைப்பாக, சித்தி மற்றும் புத்தியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கும் சித்தி புத்தி விநாயகரின் திருவுருவச் சிலையை அவர்கள் பிரதிஷ்டை செய்துள்ளனர். புதுமையான மற்றும் தத்ரூபமான அமைப்பில் காட்சியளிக்கும் இந்தச் சிலை, அப்பகுதிக்கு வரும் பக்தர்களையும் பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்து வருகிறது. பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்: அரிய வகை அலங்காரத்துடனும், பிரம்மாண்டமான சீர்வரிசைகளுடனும் காட்சியளிக்கும் இந்த சித்தி புத்தி விநாயகரைத் தரிசிக்கச் சேலம் நகர்ப்புறப் பகுதிகள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து வழங்கி வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள், இந்தத் தனித்துவமான ஏற்பாட்டையும் கலைநயத்தையும் மனதாரப் பாராட்டிச் செல்கின்றனர்.</video:description> 	<video:publication_date>2026-09-14T14:21:59+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/i2J7QSVa-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/sathis-s">Sathis S</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/minister-ramesh-criticizes-dmk-and-sekar-babu-political-remarks-104747.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/minister-ramesh-7.jpg</video:thumbnail_loc>


			<video:title>&quot;கொளத்தூர் முன்னாள் MLA வளர்த்த லட்சணம் இதுதான்!&quot;.. சேகர் பாபு பேச்சை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் விளாசல்!!</video:title>
		
			<video:description>செப்டம்பர், 13: தமிழ்நாடு அரசியலில் அரசியல் நாகரிகமும் மேடைப் பேச்சுகளின் தரமும் நாளுக்கு நாள் குறைந்து வருவது குறித்து தொடர்ச்சியான விவாதங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பொதுமேடைகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் குறித்து பிற அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆளும் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும், முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர் பாபுவின் சமீபத்திய மேடைப் பேச்சு குறித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ரமேஷ் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தனது கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.  இதையும் படிக்க: திமுக அடிபட்ட புலியாக களத்தில் இருக்கிறது.. வட்டியும், முதலுமாக திருப்பி கொடுப்போம்.. பி.கே.சேகர் பாபு ஆவேசம்! கீழ்தரமாக பேசுவதே திமுகவின் அரசியல்: திமுகவின் தற்போதைய அரசியல் கலாச்சாரம் குறித்து பேசிய அமைச்சர் ரமேஷ், இன்றைக்கு பள்ளி சிறுவர்களிடம் கேட்டால் கூட திமுகவின் அரசியல் என்னவென்று மிகத் தெளிவாகக் கூறிவிடுவார்கள் என்று சாடினார். ஆபாசமாகவும், அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவது மட்டும்தான் திமுகவின் அரசியலாக உருவெடுத்துள்ளது என்றும், கருத்தியல் ரீதியாக பேசுவதற்கோ விவாதிப்பதற்கோ அந்த கட்சியில் தகுதியான ஆட்களே இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் போற்றி வளர்த்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கைகளில் ஒன்றைக் கூடப் பின்பற்றாத நிலைக்கு இன்றைக்கு திமுக தள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது: முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் பேச்சை சுட்டிக்காட்டிய அவர், இந்து சமய அறநிலையத்துறையை நிர்வகித்த ஒரு முன்னாள் அமைச்சர், ஆன்மீக ஸ்தலங்களை வழிநடத்திய ஒருவர் பொதுமேடையில் மிகக் கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது என்றார். சேகர் பாபு மேடையில் பேசிய தரமற்ற வார்த்தைகளை அவருடைய வீட்டில் உள்ள பெண்களோ அல்லது பேரக்குழந்தைகளோ உட்கார்ந்து கேட்க முடியுமா என்றும், இத்தகைய கீழ்த்தரமான பேச்சுகள் அரசியல் நாகரிகத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் அவர் கேள்வியெழுப்பினார். திமுகவில் அரசியல் நாகரிகம் என்பது முற்றிலும் அழிந்துபோய்விட்டதாக அவர் சாடினார்.  இதையும் படிக்க: தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல… பெரும் வேதனை… திராவிட கழக வீரமணி கடும் தாக்கு! முதல்வர் எங்களுக்குக் கற்றுத்தரவில்லை: மேலும், தங்களது முதல்வரின் வழிகாட்டுதல் குறித்துப் பேசிய ரமேஷ், எதிராளிகளை நோக்கி எல்லை மீறி கீழ்த்தரமாகப் பேசுவதை தங்களது முதலமைச்சர் தங்களுக்குக் கற்றுத்தரவில்லை என்றும், கண்ணியமாகவும் நேர்மையாகவும் பேசவே தங்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அதே சமயம் திமுக நிர்வாகிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்கள் தங்களுக்கும் தெரியும் என்றும், ஆனால் பண்பட்ட அரசியலையே தாங்கள் முன்னெடுப்பதாகவும் கூறினார். முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தனது கட்சியினரையும், அமைச்சர்களையும் எப்படி வளர்த்தெடுத்து பயிற்சி கொடுத்துள்ளார் என்பதற்கு சேகர் பாபுவின் இந்த பேச்சே சாட்சி என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.</video:description> 	<video:publication_date>2026-09-13T08:43:34+05:30</video:publication_date>
<video:category>தமிழ்நாடு செய்திகள்</video:category>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/ZzuPWBkQ-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/esakkiraja">Esakkiraja Selvarathinam</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/electrical-short-circuit-in-omni-bus-tvk-stages-road-blockade-in-coimbatore-104268.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/bus-strike.jpg</video:thumbnail_loc>


			<video:title>ஆம்னி பேருந்தில் மின்கசிவு: 3 மணி நேரம் தவித்த பயணிகள்..</video:title>
		
			<video:description>கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை வெளியேறியதால், பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்படாததால் பயணிகள் சாலையிலேயே காத்திருந்தனர். பயணிகளில் இதயப் பிரச்சனை கொண்ட குழந்தையுடன் வந்த குடும்பத்தினரும், உடல்நலக் குறைபாடு உள்ளவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், மாற்று ஏற்பாடு செய்யாத பேருந்து நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள், பயணிகளுக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்தனர். மின்கசிவு ஏற்பட்ட பேருந்து மற்றும் அலட்சியமாக செயல்பட்ட நிர்வாகம் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.</video:description> 	<video:publication_date>2026-09-11T07:31:13+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/3u7UZYEc-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/residents-allege-industrial-effluent-discharge-into-gomas-puram-canal-104086.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/river-pollu.jpg</video:thumbnail_loc>


			<video:title>தொழிற்சாலை கழிவால் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய ஆறு; பொதுமக்கள் அதிர்ச்சி</video:title>
		
			<video:description>செப்டம்பர் 10, 2026: தூத்துக்குடி மாவட்டம், மாப்பிளையூரணி பகுதியில் உள்ள உப்பாறு ஓடை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு ஆற்று நீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது.  மாப்பிளையூரணி–தருவைக்குளம் சாலையில் உள்ள பாலம் முதல் இந்நிறமாற்றம் காணப்படுகிறது. ஆற்றின் கரையோரம் செயல்படும் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், நண்டு, இறால், ஆக்டோபஸ் உள்ளிட்டவற்றை ஏற்றுமதிக்காக சுத்தம் செய்து பேக்கிங் செய்கின்றன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதாகக் கூறப்படுகிறது.  இதனால் ஆற்றில் மீன்கள் காணப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மழைக்காலங்களில் அதிகளவில் கழிவுகள் நீர்நிலையில் கலப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.</video:description> 	<video:publication_date>2026-09-10T13:28:10+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/nHcHVA4d-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/bahubali-wild-elepphant-spotted-again-in-mettupalayam-surroundings-creating-a-stir-104075.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/mettu-ele.jpg</video:thumbnail_loc>


			<video:title>மேட்டுப்பாளையத்தில் மீண்டும் உலா வந்த பாகுபலி யானை..</video:title>
		
			<video:description>மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக “பாகுபலி” என அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானை நடமாடி வருகிறது. பகலில் வனப்பகுதியிலும், இரவில் விளைநிலங்களிலும் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதுவரை மனிதர்களை தாக்கியதில்லை என்றாலும், விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு மற்றொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் பாகுபலி யானையின் வால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் தகவலின்பேரில் வனக்கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.  நேற்று கோத்தகிரி சாலையில் பாகுபலி யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி, யானை வனப்பகுதிக்குள் செல்ல வழிவிட்டனர். பின்னர் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது. காயம் குணமாகும் வரை யானைக்கு தொடர்ந்து சிகிச்சையும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.</video:description> 	<video:publication_date>2026-09-10T12:55:17+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/rB0A81nE-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/leopard-trapped-in-cage-set-up-to-capture-man-eating-tiger-in-oveli-nilgiris-104018.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/siruthai-.jpg</video:thumbnail_loc>


			<video:title>புலிக்காக வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை; ஓவேலி பகுதியில் பரபரப்பு</video:title>
		
			<video:description>நீலகிரி, செப்டம்பர் 10, 2026: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி பாரம் பகுதியில் இரண்டு பேரை கொன்ற ஆட்கொல்லிப் புலியைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். புலியைப் பிடிப்பதற்காக அந்தக் கூண்டில் பச்சை இறை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்தக் கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது.  இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கூண்டில் சிக்கியிருந்த சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், அந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர். ஏற்கனவே ஆட்கொல்லிப் புலியின் நடமாட்டத்தால் ஓவேலி பாரம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், புலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கிய சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</video:description> 	<video:publication_date>2026-09-10T07:23:24+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/oj68zh1z-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/a-lone-wild-elephant-entered-a-residential-area-near-thudiyalur-in-coimbatore-at-midnight-and-damaged-a-tin-shed-where-migrant-workers-from-north-india-were-staying-causing-a-stir-103841.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/wild-.jpg</video:thumbnail_loc>


			<video:title>கோவையில் நள்ளிரவில் தொழிலாளர்கள் தங்கிய கொட்டகையை உடைத்த ஒற்றை யானை!</video:title>
		
			<video:description>கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை, விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து பசுந்தீவனங்களை உண்டதுடன், அங்கிருந்த நாய்களையும் துரத்தியது.  பின்னர், கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்து, உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சேதப்படுத்தியது. யானையின் சத்தம் கேட்டு விழித்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடி அருகிலிருந்த கட்டிடத்தில் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் சுமார் 2 மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதற்கிடையில், அப்பகுதியில் தொடரும் திடீர் மின்வெட்டால் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியாமல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.</video:description> 	<video:publication_date>2026-09-09T13:46:48+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/AnZeuUrI-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/student-nearly-falls-from-moving-bus-due-to-overcrowding-video-goes-viral-103787.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/foot-.jpg</video:thumbnail_loc>


			<video:title>பேருந்தில் ஆபத்தான பயணம்: கால் இடறிய மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய காட்சி!</video:title>
		
			<video:description>மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து பட்டவர்த்தி, மணல்மேடு உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில், மணல்மேடு நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் பள்ளி சீருடை அணிந்த மாணவன் ஒருவர், படியில் இடமின்றி ஒற்றைக் காலில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அரசு மருத்துவமனை சாலையில் பேருந்து சென்றபோது, தொடர்ந்து தொங்க முடியாமல் அவரது கால் இடறி கீழே விழும் நிலை ஏற்பட்டது. அப்போது வேகத்தடை இருந்ததால், நல்வாய்ப்பாக மாணவன் கீழே விழாமல் தடுமாறியபடி மீண்டும் பேருந்துடன் ஓடியுள்ளார். இந்தக் காட்சியை சாலையில் சென்றவர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</video:description> 	<video:publication_date>2026-09-09T07:40:32+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/TGLLj1B8-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/wild-animals-including-wild-boars-occasionally-stray-into-the-bharathiar-university-campus-which-is-situated-adjacent-to-the-marudhamalai-forest-area-in-coimbatore-103613.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/wild-boad.jpg</video:thumbnail_loc>


			<video:title>பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக உலா வரும் காட்டுப்பன்றிகள்</video:title>
		
			<video:description>கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது நுழைந்து வருகின்றன. கோடை மழை பொய்த்ததால் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி இரவு நேரங்களில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உலா வருகின்றன.  காட்டுப்பன்றிகள், முயல்கள், சாம்பார் மான்கள் மட்டுமின்றி யானைகள், சிறுத்தைகளும் இப்பகுதிக்கு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரவு நேரங்களில் மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று மாலை சுமார் 7 மணியளவில் காட்டுப்பன்றி ஒன்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தேடி உண்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</video:description> 	<video:publication_date>2026-09-08T14:14:31+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/rveoJVd4-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/preliminary-rituals-for-the-consecration-of-the-world-renowned-madurai-meenakshi-sundareswarar-temple-are-being-held-until-11-september-103617.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/meenu-kovil.jpg</video:thumbnail_loc>


			<video:title>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்.. </video:title>
		
			<video:description>உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள்  செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகின்றன. காலை 7 மணிக்குப் பிறகு அம்மன் சன்னதி அருகே உள்ள சித்தி விநாயகர் சன்னதி முன்பு விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தொடர்ந்து கஜ பூஜை, கோ பூஜை, தன பூஜை நடைபெறுகிறது. செப்டம்பர் 9-ம் தேதி வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  செப்டம்பர் 11-ம் தேதி முதல் வடக்கு ஆடி வீதியில் அமைக்கப்படும் பிரமாண்ட யாகசாலையில் 182 யாக குண்டங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. செப்டம்பர் 11 முதல் 16 வரை பக்தர்களுக்கு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரை நேரடியாக தரிசிக்க அனுமதி இல்லை. செப்டம்பர் 16-ம் தேதி உப தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். செப்டம்பர் 17-ம் தேதி காலை 7.40 முதல் 8.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 2-ம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெறுகின்றன.</video:description> 	<video:publication_date>2026-09-08T14:03:38+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/HOAMiLKW-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/dmk-mp-kanimozhi-has-condemned-cm-vijay-speech-at-assembly-stating-as-lowest-of-low-103533.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/kani-byte-.jpg</video:thumbnail_loc>


			<video:title>ஒரு முதல்வராக பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்.. முதல்வர் விஜய்யின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது - எம்.பி கனிமொழி காட்டம்..</video:title>
		
			<video:description>செப்டம்படர் 8, 2026: முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும்போது, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து பதிலளிப்பார் என எதிர்பார்த்ததாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாடு மோசமான சூழ்நிலையை நோக்கிச் செல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.  இந்தப் பிரச்சினைகளை சரிசெய்ய அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து முதலமைச்சர் தெளிவான பதிலை மக்களுக்கு அளிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பழைய விவகாரங்கள் மற்றும் சில விசாரணை ஆணைய அறிக்கைகள் குறித்து பேசியதாக கனிமொழி விமர்சித்தார்.  மேலும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிய விதம் மிகவும் கீழ்த்தரமானதாக இருந்ததாகவும், பதில் கேட்கும்போது அதற்கு பதிலளிக்க வேண்டும்; எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிப்பது முறையல்ல என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</video:description> 	<video:publication_date>2026-09-08T07:41:15+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/BGVL5hWN-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url></urlset>