AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செவ்வாய் தோஷ பயம் இனி வேண்டாம்: கிரக நிலைகளும் எளிய பரிகாரங்களும்!

Decoding Mars Dosha: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷமாக கருதப்பட்டாலும், மேஷம், விருச்சிகம், கடகம் மற்றும் மகர ராசிகளில் செவ்வாய் அமையும் போது இந்த தோஷம் முற்றிலும் நிவர்த்தியாகிவிடுகிறது.

செவ்வாய் தோஷ பயம் இனி வேண்டாம்: கிரக நிலைகளும் எளிய பரிகாரங்களும்!
செவ்வாய்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 09 Jun 2026 14:52 PM IST

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் கிரகம் அமர்ந்திருந்தால் அது செவ்வாய் தோஷமாக அறியப்படுகிறது. ஜோதிட விதிகளின்படி, 2-ஆம் இடம் குடும்பம் மற்றும் தன ஸ்தானத்தையும், 4-ஆம் இடம் சுக ஸ்தானத்தையும், 7-ஆம் இடம் களத்திர ஸ்தானத்தையும், 8-ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானத்தையும், 12-ஆம் இடம் சயன (படுக்கை) ஸ்தானத்தையும் குறிக்கின்றன. இந்த இடங்களில் செவ்வாயின் இருப்பு பல்வேறு வாழ்வியல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, 7 மற்றும் 8-ஆம் இடங்களில் செவ்வாய் இருப்பது தீவிரமான தோஷமாகவும், 2, 4, 12 ஆகிய இடங்களில் இருப்பது நடுத்தரமான தோஷமாகவும் கருதப்படுகிறது.

தோஷத்திற்கான விதிவிலக்குகளும் கிரக நிலைகளும்

செவ்வாய் குறிப்பிட்ட இடங்களில் இருந்தாலும், சில ராசி அமைப்புகளின்படி தோஷ பாதிப்புகள் முழுமையாக நீங்கிவிடுகின்றன. மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளில் செவ்வாய் இருக்கும்போது ஆட்சி பலம் பெறுவதாலும், மகர ராசியில் உச்சம் பெறுவதாலும், கடக ராசியில் நீச்சம் அடைவதாலும் செவ்வாய் தோஷம் முற்றிலும் நிவர்த்தியாகி விடுகிறது. அதாவது, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் ஆட்சி, உச்சம் அல்லது நீச்ச நிலையில் சஞ்சரித்தால் அங்கு தோஷத்தின் எதிர்மறை வீரியம் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண வாழ்வில் செவ்வாயின் ஆதிக்கம் மற்றும் பாதிப்புகள்

தாம்பத்திய சுகம் மற்றும் ரத்த ஓட்டத்திற்கு காரகனாக செவ்வாய் விளங்குவதால், திருமணப் பொருத்தத்தின் போது செவ்வாயின் பலம் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. தம்பதியரில் ஒருவருக்கு தோஷம் இருந்து, மற்றவருக்கு தோஷம் இல்லாத பட்சத்தில், அது குடும்ப அமைதியில் விரிசலை ஏற்படுத்தலாம். தசா புத்திகள் சாதகமற்று இருக்கும் வேளையில், தம்பதியரிடையே அன்யோன்யம் இருந்தாலும் உடல்நலக் குறைவு, தேவையற்ற வாக்குவாதங்கள் அல்லது எதிர்பாராத விபத்துகள் போன்ற விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த தோஷம் சிலருக்குத் திருமணத் தடையையோ அல்லது தாமதத்தையோ உண்டாக்கலாம்.

பரிகாரங்களும் தோஷ நிவர்த்தி முறைகளும்

செவ்வாய் தோஷத்தைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை; ஏனெனில், முறையான ஆன்மீக வழிபாடுகள் மூலம் இதன் தாக்கத்தைக் குறைக்க முடியும். செவ்வாயின் அதிபதியான முருகப்பெருமானை வணங்குவது மிகச்சிறந்த பரிகாரமாகும். செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவிலுக்குச் சென்று, செவ்வரளி அல்லது ரோஜா போன்ற சிவப்பு நிற மலர்களைச் சாற்றி, சிவப்பு வஸ்திரம் (ஆடை) அணிவித்து வழிபடுவது நல்ல பலனைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘வரும் முன் காப்பதே சிறந்தது’ என்பதற்கு இணங்க, தோஷமுள்ள ஜாதகத்திற்கு அதே போன்ற தோஷமுள்ள மற்றொரு ஜாதகத்தை (சம பலம் கொண்ட ஜாதகம்) இணைப்பதே இல்லற வாழ்க்கை சிறக்க மிகச்சிறந்த வழியாகும்.

Follow Us